நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை ஜாக் மா தொடங்கினார்
சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, உலகப் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா, அலிபாப நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார். பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது. பல முக்கிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக் மாவின் சில முக்கிய கூற்றுகள் இங்கே பகிரப்பட்டுள்ளது

No comments:
Post a Comment